இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல்வேறு நாடுகள் உதவி புரிந்து வரும் நிலையில், சீனாவும் ரூ.21 கோடி நிதியுதவியை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ சியன்லியாங் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக அனுதாபம் வெளியிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை மீள கட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைவில் நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு முடியும் என்று அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.