வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குறித்த உணவுப் பொதியினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வறட்சி காரணமாக 19 மாவட்டங்களில் சுமார் 12 இலட்சத்து 50 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது