பாதுகாக்கப்பட்ட நகல்ஸ் வனப் பிரதேசம் தனியாருக்கு வழங்கப்படவில்லை…

பாதுகாக்கப்பட்ட நகல்ஸ் வனப் பிரதேசத்திற்கு உரித்தான காணிகள் எந்தவொரு தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது முதலீட்டாளர்களுக்கோ வழங்கப்படவில்லை என தொழில் முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்ற தோட்டக் கம்பனிகளுக்கு கழிவு நிலங்கள் மாத்திரம் தனியார் முதலீட்டுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.