குருநாகல் – கனேவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களது சடலம் தற்போது கனேமுல்லை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.