இளைஞர்கள் 11பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கச் செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு அமைய, இந்நாள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றிற்கு இன்று(19) அறியப்படுத்தியுள்ளது.
அவரை கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது என்றும், அதன்படி அவரை எதிர்வரும் நாட்களில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கவுள்ளதாகவும், குறித்த திணைக்களம் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.