பாம்பின் துணையுடன் குழந்தை பெற்றேன் – 19 வயது இளம் பெண்ணின் தகவலால் பரபரப்பு…

தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலம், ஓக்போமோஸோ பகுதியை சேர்ந்தவர் கெஹிண்டே என்கிற 19 வயது இளம் பெண். இவர் வெளியிட்டுள்ள ஒரு தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் சொல்வதை கேட்கும் பலர், இவர் பொய் சொல்கிறார் என்றும் இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

அப்படி என்ன கூறுகிறார் தெரியுமா இந்த பெண்..?

“.. கடந்த நான்கு ஆண்டுகளாக இவரது கனவில், பாம்பு உருவத்தில் ஒரு ஆண் வருவாராம். முதலில் பாம்பாக தோன்றி பிறகு மனிதனாக மாறி, இவருடன் உடலுறவு வைத்து கொள்வாராம்.

இந்த பெண்ணும் அந்த பாம்பு மனிதருக்கு, ஒரு குழந்தையை பெற்றாராம். ஆனால் அந்த குழந்தை பார்ப்பதற்கு சாதாரண குழந்தை போல் இருந்தாலும் கீழ்தாடையில் பாம்புக்கு இருப்பது போல் இரண்டு பற்கள் இருந்ததாம். ஆனால் இந்த குழந்தை பிறந்த அன்றே இறந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவரின் சொல்லும் கதையை யாரும் நம்பவில்லை என்றாலும், இவருக்கு ஏதேனும் மன ரீதியான பிரச்சினை இருக்கிறதா என்பது குறித்து அறிய இவரை மருத்துவர்களிடம் அழித்து செல்ல கூறி உறவினர்கள், மற்றும் நண்பர்கள் இவருடைய பெற்றோருக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்…”