பாராளுமன்றத்தின் நாளைய(23) அமர்வின் போது ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அனுமதி…

பாராளுமன்றத்தின் நாளைய(23) அமர்வின் போது பொது மக்கள் பார்வையாளர்கள் பகுதியும், தூதுவர்களுக்கான பகுதியும் மூடப்படும் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக கடந்த 19 ஆம் திகதி பொது மக்கள் பார்வை பகுதியை மூடிவிடுவதாகவும், ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.