பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி இன்றும் மூடப்படவுள்ளது..

பாராளுமன்றம் இன்று(29) காலை 10.30 மணிக்கு கூடவுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி மற்றும் விசேட விருந்தினர் கலரி ஆகியன இன்றும் மூடப்படவுள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக பாராளுமன்றத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.