பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைமைப் பதவியில் இருவர் கடமையாற்றுவதாக ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று(19) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுகையில்; தன்னைப் போன்றே மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்கட்சித் தலைவராக கடமையாற்றுகிறார் என தெரிவித்திருந்தார்.
மேலும், அவர் சபாநாயகர் தன்னை எதிர்கட்சித் தலைமைப் பதவியில் இருந்து நீக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.