பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்றும் கூடவுள்ளது

(FASTNEWS|COLOMBO) – கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று(25) முற்பகல் 10 மணியளவில் மீண்டும் கூடவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நான்கு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.