சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றார்.
திலும் அமுனுகம காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
++++++++++++++++++++++++++++++ Update
பாராளுமன்றில் அமைதியின்மை…
சபாநாயகர் ஆசனத்தை ஆளுங் கட்சியினர் சுற்றி வளைத்ததால் சபையில் அமைதியின்மை தோன்றியுள்ளது.
பிரதமர் மஹிந்த அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் எதிராக வாக்கெடுப்பை நடத்துமாறு, லக்ஸ்மன் கிரியெல்ல கோரியதையடுத்து, சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் ஆசனத்துக்கு அருகில் சென்றதும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக சபாநாயகரை சுற்றி வளைத்தனர்.