பாராளுமன்றத்தில் இன்று(12) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் பிரேரணையை குறித்த கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைக்கவுள்ளார்.
மேலும், பாராளுமன்றத்தில் ஜனாதிபதி நியமித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மீதும் அவரது அமைச்சரவை மீதும் நம்பிக்கை இல்லை என ஜே.வி.பி கொண்டுவந்த பிரேரணை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் 121 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன் மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீதான நம்பிக்கையில்லா பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேரணை ஒன்றிணை ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் முன்வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.