பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -எதிர்வரும் 03 ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்றத்தைக் கூட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதற்கமைய, எதிர்வரும் 04, 05, 06 ஆம் திகதிகளில் சபை நடவடிக்கையை இடைநிறுத்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற பொலிஸ் பிரிவை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டமையால் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.