பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டம் இன்று(21) முற்பகல் 11.00 மணியளவில் சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியின் நியமனத்தின் பின்னர் பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.