நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று(03) இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோரின் சேவை, ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த இந்த இடைநிறுத்தமானது, நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுலாவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று அறிவித்தார்.