பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று(23) விசேட சோதனை..

இன்று(23) காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில், பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு நுழையும் முன்னர் அனைவரும் விசேட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு உள்நுழையும் போது முதல் தடவையான சோதனைகளும், பின்னர் சபைக்கு உள்நுழையும் போது இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.