(FASTNEWS|COLOMBO) – பாராளுமன்றத்தின் எந்தவொரு உறுப்பினருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் அல்லது முறைப்பாடுகள் ஏதும் இருப்பின் அவற்றினை பொலிஸ் தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவிற்கு வழங்க முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற தெரிவுக் குழு கூட்டத்தில் இது தொடர்பிலான யோசனைக்கு அனுமதி கிடைக்கப் பெற்றதாகவும் சபாநாயகர் இன்று(06) கூடிய பாராளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.