பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்க இன்று(18) தீர்மானித்துள்ளது.
முன்னதாக, குவைத் நாட்டுக்கு செல்ல அனுமதியளிக்குமாறு கம்மன்பில நீதிமன்றத்திடம் கோரியிருந்த நிலையில், அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.