பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு…

கடந்த 2018 நவம்பர் 24 ஆம் திகதி, அப்போதைய ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளராக இருந்த, தனசேன சுரசிங்கவை தாக்கியமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை, மிக கொடூரமாக வற்புறுத்தியமை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரர் ஆகியோருக்கு பிணை வழங்குமாறு கோரிய பிணை மனு சிலாபம் மேல் நீதிமன்றினால் இன்று(03) நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் ஆரச்சிகட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகிய இருவரையும் எதிர்வரும் மே மாதம் 25ம் திகதி விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Rishma