நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவிடம் 02 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ரவி கருணாநாயக்கவிடம் 300 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி பந்துல குணவர்த்தன, அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், பந்துல குணவர்த்தன குறிப்பிட்டது போல, தான் அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரைப் பற்றி தவறாக கருத்துக்கள் எதனையும் வௌியிடவில்லை எனவும் நிதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.