பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் ஏற்பட்ட தீ பரவியுள்ளதுடன் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரமவின் உத்தியோகபூர்வ அறையிலுள்ள, குளிரூட்டியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 நிமிடங்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.