பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பதவிக் காலம் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.