இன்று(06) பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கவுள்ள பிரதமர்

(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(06) பிற்பகல் 02  மணி அளவில் ஒன்று கூடவுள்ளது.

இன்றைய பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகி சாட்சி வழங்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தெரிவுக் குழுவில் இராஜாங்க அமைச்சர் ருவாண் விஜவர்தனவும், சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர்களாக பதவி வகித்திருந்த சாகல ரத்நாயக்க, மத்தும பண்டார ஆகியோரும் சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.