பாராளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை…

அண்மையில் பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் 05 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

விசாரணைகளின் முன்னேற்றம் சம்பந்தமாக சட்ட மா அதிபரிடம் தெரிவித்து ஆலோசனை பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் கூறியுள்ளார்.