(FASTNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு, குறித்த தெரிவுக் குழு தீர்மானித்துள்ளது.
குறித்த தெரிவுக் குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற சில நாட்களுக்குள் அத்தாக்குதல் சம்பவம், இது தொடர்பான பொறுப்புக் கூறலில் இருந்து விலகிய நபர்கள் தொடர்பான பல தகவல்கள் தெரியவந்துள்ளதால், இந்த தெரிவுக் குழு விசாரணை நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.