பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கையானது அடுத்த மாதம் சபாநாயகருக்கு

(FASTNEWS| COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கையானது எதிர்வரும் மாதத்தில் தயாரித்து முடிக்கவுள்ளதாக குறித்த தெரிவுக் குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இறுதி அறிக்கையினை சபாநாயகருக்கு கையளித்ததன் பின்னர் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.