பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது

(FASTNEWS|COLOMBO) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான சம்பவங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு இன்று(13) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்றைய அமர்வில் சமூகமளிக்க உள்ளார்.

இந்த தெரிவுக்குழு முன்னிலையில் சமீபத்தில் காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் இஸ்லாம் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி அப்துல் உவைஸ் சாட்சியம் அளித்திருந்தார்.