பாரிசில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் – 7 பேர் காயம்…

பாரிஸ் நகரில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் 2 சுற்றுலாப் பயணிகள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

படுகாயம் அடைந்த 7 பேரில் 4 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதுடன், அவர்களில் இரண்டு பேர் பிரிட்டனை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கத்தியால் குத்திய நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் எனும் தகவல் வெளியாகியுள்ளது.