பாரியளவிலான ஹெரோயினுடன் கைதான இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி…

(FASTNEWS | COLOMBO) இந்நாட்டில் கைப்பற்றப்பட்ட மிகப் பாரிய தொகையான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் மார்ச் மாதம் 01ம் திகதி வரையில் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய கோட்டை பதில் நீதவான் லோசன அபேவிக்ரம இன்று (23) அனுமதியை வழங்கியுள்ளார். 

கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் இருந்து இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.