பாரீஸில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட விமானம் சீரற்ற காலநிலையால் தரையிறக்கம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பத்திரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

193 பயணிகளுடன் பாரீஸில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தின் பயணத்திற்கு சீரற்ற காலநிலை குறுக்கிட்டது.

இந்நிலையில் குறித்த விமானம் இன்று பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விமானத்தின் பணியாளர்கள் நால்வர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

One thought on “பாரீஸில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட விமானம் சீரற்ற காலநிலையால் தரையிறக்கம்

  1. இலங்கை விமானம் தப்பி விட்டது

Comments are closed.