(FASTGOSSIP |INDIA) ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் காதலையும் அவரிடம் கூட சொல்லியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அம்மா இல்லாதது என்றுமே என் மனதில் பாரமாக இருக்கும் என்று ஜான்வி அடிக்கடி கூறி வருகிறார். காதல் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
நான் செம்மயாக கடலை போடுவேன். எனக்கு பிறரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம். அதனால் பேசத் துவங்குவேன். பசங்க தவறாக புரிந்து கொண்டு ப்ரொபோஸ் செய்தால் சாரி பாஸ், வேறு ஆளை பாருங்க என்று கூறிவிட்டு கிளம்பிவிடுவேன்.
எனக்கு பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்ஸ்டாகிராமில் அவரிடம் ஐ லவ் யூ என்று தெரிவித்துள்ளேன். அதை பார்த்துவிட்டு அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை’ என்று ஜான்வி கூறியுள்ளார்.