பாவனைக்கு உதவாத 2500 பெரிய வெங்காயம் அழிப்பு…

தம்புளை மாநகர சபையின் சுகாதார பிரிவு மேற்கொண்ட முற்றுகையின் போது தம்புளை நகர மத்தியிலுள்ள களஞ்சிய சாலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாவனைக்கு உதவாத 2500 கிலோ பெரிய வெங்காயம் அழிக்கப்பட்டுள்ளது.

தம்புளை மாநகர சபை நகர ஆணையாளர் ரூவான் ரத்நாயக்க சுகாதார பிரிவின் தலைமை அதிகாரி டொக்டர் தயந்த வீரசேகர ஆகியோருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பெரிய வெங்காயம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவை நேற்று ஊற்றி அழிக்கப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது.