பாவனையாளர்களிடம் வரி மோசடி செய்துள்ள etisalat நிறுவனம்!

2% தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிக்குப் பதிலாக etisalat நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களிடம் 4% வீத வரியை அறிவிட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

பாவனையாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தினால் இந்த விவகாரம் குறித்து தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் கடிதமூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ந்து விரைவில் இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

etisalat நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் அதிக வரி வசூலிப்பு குறித்தும் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

EtiLetter_600px_16_03_11