பிரேமலால் சிறைச்சாலை மருத்துவமனையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர வெலிகடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜயசேகர மரண தண்டனை கைதியாக வெலிகடை சிறைச்சாலையில் வை.ஓ சிறைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் சிறைச்சாலை வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.