பிணைமுறி மோசடி விவகாரம் – தொலைபேசி உரையாடல் அறிக்கையினை பெற உத்தரவு…

பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன மற்றும் பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் ஆகிய தரப்பினருடன் தொடர்பு வைத்திருந்த நபர்களின் தொலைபேசி உரையாடல் சம்பந்தமான அறிக்கையை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு ​தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, 29 ஆம் திகதி வரை அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேனவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.