பிணை முறி ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

இன்று மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழு கூடி  மேலதிக சட்டமா அதிபர் சார்ப்பித்த விண்ணப்பத்தை ஆராய்ந்ததன் பின்பு,  அர்ஜுன் ஆலோசியஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தொலைபேசிகள் சம்மந்தமான கணக்கை அடையவோ அல்லது அதன் தரவுகளை அழிக்கவோ முற்படுவதற்கு  அலோசியசிற்கு  தடை விதித்துள்ளது.
 இத்தடை மீறப்படின் தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழு  எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பெர்பெக்ச்சுவல் திறைசேரி ( Perpetual Treasuries) தலைமை அதிகாரி பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளை ஆணைக்குழுவின் செயலாளரிடம் கையளிக்கும்படியும்  கட்டளை பிறப்பித்துள்ளது.