மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தது எவரையும் இலக்கு வைத்து அல்லவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.