பிதுரங்கல சம்பவம் – கைதான மூவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்…

வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூவரையும் எதிர்வரும் 10ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை நீதிவான் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 26ம் திகதி குறித்த சந்தேக நபர்கள் சீகிரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.