(FASTNEWS | COLOMBO) – கல்முனை, மரதமுனை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கிய சந்தேகத்தின்பேரில் நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்று(21) இரவு 08.45 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரிடம் ஒசாமா பின் லேடன் இனது புகைப்படங்கள் உள்ளிட்ட அவரது போதனைகள் அடங்கிய புத்தகம், சந்தேகத்திற்குரிய DVD மற்றும் MI சிம் அட்டைகள் இரண்டு உள்ளடங்கிய கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.