ஊழல் முறைகேடு தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக செப் பிளாட்டர் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் சகாப்தமான மரடோனா பிபா தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார் என்று அவருக்கு நெருங்கிய பத்திரிகையாளரான உருகுவேயை சேர்ந்த விக்டர் ஹூகோ மோரல்ஸ் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.