பியல் நிஷாந்தவிடம் 05 மணிநேர விசாரணை…

(FASTNEWS|COLOMBO) இன்று(06) காலை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்றிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, சுமார் 05 மணி நேர விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு அமைய வாக்குமூலம் வழங்கவே அவர் இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.