(FASTNEWS|COLOMBO ) – ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்காக நிரந்தர நீதாய நீதிமன்றத்தை அமைக்குமாறு சட்டமா அதிபர், நீதியரசரிடம் கோரியுள்ளார்.
ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கை விசாரணை செய்வதற்காக குறித்த நீதிமன்றத்தை நியமிக்குமாறு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.