15ஆவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வியாழக்கிழமை(20) வெளியாகும் என்று அரச அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியானதன் பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாளை வெள்ளிக்கிழமை(21) சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
(riz)