(FASTNEWS | COLOMBO) – பிங்கிரிய புதிய முதலீட்டு வலயத்தின் பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கருத்து தொடர்பில் ஆடை துறையில் பங்களிப்பினை வழங்கும் பெண்கள் மற்றும் இலங்கையில் உள்ள முன்னணி பெண்கள் அமைப்பு ஆகியவை எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
நேற்று(04) மாலை இடம்பெற்ற குறித்த வைபவத்தில் மிகவும் சாதுவாக, சிரிப்பு முக பாவனையுடன் பிரதமர் உரையாற்றுகையில்;
“பெண்களுக்கான சிறந்த உள்ளாடை (சிங்கள மொழியில் ‘ஜங்கி’) உலகினை இன்று இலங்கை தயாரிக்கிறது.. விக்டோரியா சீக்ரட் இடம் கேளுங்கள் அவர்களது தயாரிப்பான உள்ளாடைகள் (‘ஜங்கி’) எங்கிருந்து வருகின்றது என்று?பெண்களுக்கு தெரியும்..”
குறித்த உரையானது பெண்களை அசௌகரியத்திற்கு இட்டுச் சென்றதாகவும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் தெரிவித்து சில பெண்கள் அமைப்புக்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.