பிரதமரின் யாழ்.வருகையினை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

(FASTNEWS | COLOMBO) – சமுர்த்தி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கும் முகமாக எதிர்வரும் 02 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதால், பல பகுதிகளில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது யாழ்.செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மாநகர சபை வளாகம் மற்றும் மணியம்தோட்டப் பகுதி உள்ளிட்ட யாழ்.நகரப் பகுதிகளில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களின் விபரங்களையும் பொலிஸார் சேகரித்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.