(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரதமரின் சரியான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க 10 சுயாதீன கட்சிகள் முடிவு செய்துள்ளன.
சுயாதீன கட்சிகளின் 10 உறுப்பினர்களுக்கிடையில் இன்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் 10 சுயாதீன கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (16) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.