பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட உள்ளதாகவும், அதன் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 06 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரக்சிட் விவகாரத்தில் அவரின் கொள்கைக்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவர் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கன்சவேர்டிவ் கட்சித் தலைவர் பதவியும் சவாலை எதிர் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.