பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரே இந்த பிரேரணையை கையளித்துள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 112 பேர் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மேலும்  தெரிவித்தார்.

மேலும்; பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று இரவு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.