பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான விவாதம் இடம்பெறும் அன்றே இரவு வாக்கெடுப்பு..

ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 04ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான வாக்கெடுப்பு இரவு 9.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்திருந்தார்.

நேற்று(27) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரவித்திருந்தார்.

பிரதமருக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை விருப்பம் இல்லை எனின், உடனடியாக பிரதமர் பதவி வேண்டும் என்றும், பெரும்பான்மை விருப்பு உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமர் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைக்க அதிகாரம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரவித்திருந்தார்.

 

 

-Rishma