பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் இன்று(06) சமர்ப்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரால் கையொப்பமிட்ட பின்னர் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றிணைந்த எதிர்கட்சியிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(06) பிற்பகல் 1:00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.